வெண்முரசு முதல் நூலான முதற்கனலையும் சரி இரண்டாம் நூலான மழைப்பாடலையும், என்னுடைய உபயோகத்திற்காகவும், தொடர்ந்து படிக்க இயலாத, இணைய வசதி இல்லாத நண்பர்ககள் புத்தகவடிவில் வரும் முன்னர் வாசிக்க, அன்றாடம் தரவிறக்கி சேமித்து வைப்பேன். வெண்முரசு ஏதாவதொரு வடிவில் எல்லோரிடமும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இது. வெண்முரசு நூல் இரண்டு மழைப்பாடலை pdf கோப்பாக்கி இணையத்தில் பதிவேற்றுவதும் அதனால்தான். இது மூன்று இணைய தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. 1. Scribd 2. Slideshare 3.Issuu ஒவ்வொரு தளமும் இந்த பதிவேற்றங்களை வெவ்வேறு வகையில் மாற்றிக் கையாள்கின்றன. இதில் தங்களுக்கு படிக்க வசதியான தளத்தை வாசகர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதுவெல்லாம் புத்தகமாக வெளிவரும் வரைதான். மழைப்பாடல் அச்சாகி வெளிவந்தவுடன், அதை வாங்கி படிக்க வேண்டிக்கொள்கிறேன். மழைப்பாடல் முழுமையான ஒரு கோப்பாக நம் கணனியில் இருப்பது, நமக்கும் நம்மிடமுள்ள கணனிக்கும் நாம் செய்யும் மரியாதை